Thursday, April 14, 2011

சின்னக்குயிலின் செல்லக்குயில் மறைந்தது...


கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நமது செவிகளை, இன்னிசையால் நிறையச் செய்துகொண்டிருந்த சின்னக்குயில் சித்ரா அவர்களின் செல்லமகள் பரிதாபமாக மரணமடைந்தது கேட்டு, மிகுந்த துயரமடைகிறேன். பல ஆண்டுகளுக்குப் பின் குழந்தை பாக்கியம் பெற்று, ஆசை ஆசையாய் வளர்த்துக்கொண்டிருந்த வேளையில் அந்தக் குழந்தையையும் இறைவன் பறித்துக்கொண்டது தாங்கொணாத் துயரம்தான். இதிலிருந்து அவர் எப்படி மீளப்போகிறார் எனத் தெரியவில்லை. ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை. அந்தக் குழந்தையின் ஆன்மா சாந்தியடையவும், சித்ரா அவர்கள் மீண்டு வரவும் இறைவனிடம் வேண்டுவது, நமது கடமையென நினைக்கிறேன்.

No comments:

Post a Comment