Wednesday, March 25, 2009

கண்தானம் செய்யுங்கள்


இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 110 கோடியை தாண்டி விட்டது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 62389 பேர் இறந்து போகிறார்கள்.... நாள் ஒன்றுக்கு 86853 பேர்கள் புதிதாக பிறக்கிறார்கள்.

இந்நிலையில் இந்தியாவிலுள்ள பார்வையற்றவர்களின் எண்ணிக்கையோ 682497 ஆக இருக்கிறது. இறந்து போகும் மனிதர்கள் தங்கள் கண்களை தானம் செய்தால் பத்தே நாட்களில் இந்தியா பார்வையற்ற மனிதர்கள் இல்லாத நாடாக மலர்ந்து விடும்.

எதிர்கால இந்தியாவை உங்கள் கண்களாவது காணட்டும்.... ஒளிமயமான இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி ஏன் நீங்களாக இருக்கக் கூடாது...

கண்தானம் செய்யுங்கள்.....

" இறந்த பின்பும் இயற்கையை ரசிக்கிறேன்....
இரண்டு கண்களால் இன்னும் இருக்கிறேன் "

No comments:

Post a Comment